தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதே போன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் கொடுத்திருக்கிறது.