தமிழகத்தில் சென்றது சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் ஒரு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்யும் அதேசமயம் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் வெப்ப அலை வீச கூடும் என்று எச்சரித்து இருக்கிறது