இடியுடன் கூடிய கனமழை..!! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்..!! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

கேரள மாநிலத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், கேரள மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு இருப்பதாகவும் இன்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய கனமழை..!! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்..!! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை..!!

அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அக்டோபர் 25ஆம் தேதி வரை பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் கனமழை காரணமாக லட்சத்தீவு கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CHELLA

Next Post

இன்று முதல் 144 தடை உத்தரவு..!! சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழையத் தடை..!! பதற்றம்

Sun Oct 23 , 2022
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801ஆம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் 3 தினங்களுக்கு பிறகு மருது சகோதரர்களின் உடல்கள் அவர்கள் கட்டிய காளையார்கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணமடைந்த மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை அரசு விழாவாக […]
இன்று முதல் 144 தடை உத்தரவு..!! சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழையத் தடை..!! பதற்றம்

You May Like