கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடக்கு அரபிக்கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த அதிதீவிர புயலான பிபர்ஜாய் புயல் கடந்த வியாழக்கிழமை மாலை ஆறு முப்பது மணி அளவில் குஜராத்தில் கரையை கடந்தது.
இந்த நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக மழை பொழிவு பதிவாகி இருக்கிறது.
இந்த புயலின் காரணமாக, ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு மில்லி மீட்டர் முதல் 22 மில்லி மீட்டர் வர எண் மழையின் அளவு பதிவாகி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதோடு பார்மர், ஜாலூர், சிரோகி, பாலி போன்ற மாவட்டங்களுக்கு ஆராய்ந்து அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு 30 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீச கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சால்மர்,பிகானெர்,ஜோத்ப்பூர்,சுரு,சிகார், ஜுன்ஜ்ஹுனு, அஜ்மீர் உதய்ப்பூர் மற்றும் ராஜ்மந்த் போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தின் சில பகுதிகளில் வரும் திங்கள்கிழமை வரையில் கனமழை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.