3 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையம் தகவல்..!

tn rains new

தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..

கடந்த வாரம் மோன்தா புயல் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது.. அதன்பின்னர் மழையின் அளவு படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது..


இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. மயிலாடுதுறை, கடலூர், புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

வரும் 6-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. தஞ்சாவூர், திருவாரூ, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..

சென்னையை பொறுத்த வரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டியும் இருக்கக்கூடும்.. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Read More : Flash : பாமக MLA அருள் கார் மீது தாக்குதல்.. அன்புமணி தரப்பினர் தன்னை கொல்லை வந்ததாக பகீர் குற்றச்சாட்டு..

RUPA

Next Post

மீண்டும் திமுக துணை பொதுச்செயலாளரானார் பொன்முடி.. புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.. துரைமுருகன் அறிவிப்பு..

Tue Nov 4 , 2025
திமுக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. கடந்த ஏப்ரல் மாதம் பொன்முடி திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் திமுக துணை பொதுச்செயலாளராக அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் அறிவித்துள்ளார். திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இல. பத்மநாபன் நியமனம் […]
1358436

You May Like