இந்த மாவாட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்! வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

Cyclone Mocha 1

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..

வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நேற்று நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று காலை வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.. இது மேற்கு திசையில் நோக்கி நகர்ந்து, தெற்கு ஒடிசா, அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் கடந்து செல்லக்க்கூடும்.


மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.. மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்.. உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு!

RUPA

Next Post

பணம் பெருக இந்த கலர் பர்ஸை பயன்படுத்துங்க! பணக்காரராக மாறுவதற்கான ரகசியம் இதோ!

Fri Sep 12 , 2025
ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் ஆளுமை, அதிர்ஷ்டம் மற்றும் எதிர்காலத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று எண்கணிதம் கூறுகிறது… ஒவ்வொரு தேதிக்கும் சொந்த எண் உள்ளது, இது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. நாம் பயன்படுத்தும் பொருட்கள் இந்த கிரகங்களின் நிறங்களின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தைத் தருகின்றன என்று நம்பப்படுகிறது. மிக முக்கியமாக, நாம் பயன்படுத்தும் பர்ஸ் அல்லது கைப்பையின் நிறம் நமது நிதி நிலையை நேரடியாக பாதிக்கிறது. எனவே, உங்கள் பிறந்த […]
purse money wealth attraction tips 1

You May Like