மிகவும் மெலிந்து.. ஆள் அடையாளமே தெரியாமல் போன அஜித்.. ஷாக்கான ரசிகர்கள்.. வைரல் போட்டோ..

152142919 1

நடிகர் அஜித்தின் புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்.. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படத்தின் அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்..


நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார், பைக் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.. இந்த ஆண்டே அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாகின. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்திற்காக அஜித்திற்கு அதிகபட்ச சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் புதிய போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் அஜித்தின் இந்த புதிய லுக்கை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆள் மெலிந்து, மொட்டை தலை உடன் வயதானவர் போர் தோற்றமளிக்கிறார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், அஜித்தை இப்படி பார்க்கவே கஷ்டமாக உள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ அஜித், ராட்சசன் படத்தில் வரும் கிறிஸ்டோஃபர் போல இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

RUPA

Next Post

போதை பொருள் வழக்கு.. நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை..

Tue Jun 24 , 2025
போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீ காந்த் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவர் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீ காந்த் ஒரு கிராம் ரூ.12,000 என்ற விலையில் மொத்தம் ரூ.4 லட்சம் வரை பணப்பரிமாற்றம் […]
122022814

You May Like