அனைத்து அரசு பேருந்திலும் பெண்களுக்கு இலவச பயணம்…! மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் உத்தரவு…!

ராஜஸ்தானில் உள்ள பெண்கள் இன்று அரசு பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்த இலவசப் பயணத்தின் பலன் இன்று இரவு 11:59 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான இந்த வசதியை அரசு அறிவித்துள்ளது. நேற்று ஹோலி-துளந்தி பண்டிகையை கொண்டாடிய நிலையில், வேலை, படிப்பு அல்லது பிற வேலைக்காக இன்று பிற நகரங்கள், மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு இது அதிகபட்ச நன்மையைத் தரும் என கூறியுள்ளார்.

உத்தரவுகளின்படி, செவ்வாய்க்கிழமை இரவு 12 மணி முதல் இலவச பயண வசதி கிடைக்கும். பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். இந்த இலவச சேவை 11.59 வரை கிடைக்கும்.

Vignesh

Next Post

மிகப்பெரிய ஷாக்.. 6 லட்சம் HDFC வாடிக்கையாளர்களின் தகவல்கள் Dark Web-ல் கசிந்ததா.. ? வங்கி அளித்த விளக்கம் என்ன..?

Wed Mar 8 , 2023
HDFC வங்கியின் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த வங்கி இதனை மறுத்துள்ளது.. தகவல் திருட்டு என்பது தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சாதாரணமான நிகழ்வாகி விட்டது.. வங்கி தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல முக்கியமான பணிகளையும் ஆன்லைனிலேயே செய்து முடிக்க முடியும்.. அந்த வகையில் இணையத்தில் நமது தகவல்களை பதிவிடும் போது, அல்லது நமது ஸ்மார்ட்போனில் பல்வேறு செயலிகள் […]
The Data Breach Saga II Website

You May Like