கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால் வடதமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்தது.

குறிப்பாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி இன்று ஒரு நாள் மட்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.