முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீடு தேடி மருந்து விநியோக சேவை.‌..! அசத்தும் அஞ்சல் துறை..!

post 2025

முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு மருந்து விநியோக சேவைகளை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.


முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகளை பெற்று வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பிரத்யேக சேவையை முன்னாள் ராணுவ வீரர்கள் துறையுடன் இணைந்து அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.இந்த முன்முயற்சி திட்டத்தின் கீழ் கிராம நிலையிலான தொழில்முனைவோரின் பொதுச்சேவை மையங்கள் மூலமாக மருந்துகளை கொள்முதல் மற்றும் பேக்கேஜ் செய்து இந்தியா போஸ்ட் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீடுதேடி விநியோகம் செய்யப்படும்.

இந்த நடைமுறை நாடுமுழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்டப் பயனாளிகளுக்கு பாதுகாப்புடன் மருந்துகள் சென்றடைவதை உறுதிசெய்யும்.ஏற்கனவே 2025 ஜூலை 31 அன்று தில்லியில் பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2025 அக்டோபர் 17 முதல் நாடு முழுவதும் இந்த சேவை வழங்கப்படுகிறது.

Vignesh

Next Post

பயங்கரவாதத்திற்கு ஆபரேஷன் சிந்தூர், சர்ஜிக்கல் மூலம் பதிலடி; இந்தியாவை தடுக்க முடியாது!. பிரதமர் மோடி பேச்சு!

Sat Oct 18 , 2025
பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா இனி அமைதியாக இருக்காது, மாறாக சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்த ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போதுஅவர் பேசியதாவது, முந்தைய அரசாங்கங்கள் கட்டாயத்தின் பேரில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினாலும், தனது அரசாங்கம் அவற்றை உறுதியுடன் பின்பற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆபத்தையும் சீர்திருத்தங்களாக மாற்றியுள்ளதாகவும் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு […]
Prime Minister Narendra Modi 1

You May Like