வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்.. மீண்டும் வட்டியை குறைக்கிறது RBI.. புதிய தகவல்..

home loan emis to fall canara bank union bank iob cut lending rates after rbi repo rate cut 1

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மேலும் குறைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனால் வீட்டுக்கடன் குறைய வாய்ப்புள்ளது.

எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது நடுத்தர மக்களின் கனவாக உள்ளது. நீங்கள் வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. வரும் காலத்தில் EMI குறையப் போகிறது.. ஆம்.. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் ரெப்போ விகிதத்தைக் குறைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..


டிசம்பரில் நடைபெற உள்ள நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில் ரெப்போ விகிதம் மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக இருக்கும்..

HSBC அறிக்கை

HSBC குளோபல் ரிசர்ச் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் “ ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் கூட்டங்களில் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிசம்பர் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் 25 அடிப்படை புள்ளிகளை இறுதிக் குறைப்பு செய்யும் என்று நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி 5.25 சதவீதமாக மாற்றும்.

ஜூன் மாதத்தில் குறைந்த பணவீக்கம்

ஜூன் மாதத்தில், நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்க விகிதம் மே மாதத்தில் 2.8 சதவீதத்திலிருந்து ஜூன் மாதத்தில் 2.1 சதவீதமாகக் குறைந்தது. மலிவான உணவுப் பொருட்களின் காரணமாக பணவீக்கத்தில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது, இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சராசரி பணவீக்கம் 2.7 சதவீதமாக இருக்கும் என்றும், இது ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டான 2.9 சதவீதத்தை விடக் குறைவு..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் என்ன சொன்னார்?

ரெப்போ விகிதம் பற்றிப் பேசுகையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், குறைந்து வரும் பணவீக்கம் மற்றும் வளர்ச்சியில் மந்தநிலை இரண்டும் ரெப்போ விகிதக் குறைப்புக்கு காரணம் என்று தெரிவித்தார். அதாவது, MPC-யின் அடுத்த கூட்டங்களில் ரெப்போ விகிதம் தொடர்பாக எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அது பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தது.

ரிசர்வ் வங்கி முதலில் பிப்ரவரியில் ரெப்போ விகிதத்தை 0.25 அடிப்படைப் புள்ளிகளால் குறைத்தது, பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் குறைக்கப்பட்டது.. இதன் காரணமாக அது 6.00 சதவீதமாகக் குறைந்தது. இதன் பிறகு, ஜூன் மாதத்தில் ரெப்போ விகிதத்தில் 0.50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டது, இதன் காரணமாக அது 6.00 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாகக் குறைந்தது

ரெப்போ விகிதம் என்றால் என்ன?

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்கும் போது, வசூலிக்கும் வட்டி விகிதமாகும். வணிக வங்கிகள் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் போது, ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால கடன்களைப் பெறுகின்றன. இந்த கடன்களுக்கு ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் ஆகும்.

ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும்போது, வங்கிகளுக்கான கடன் செலவு குறைகிறது, இது பொதுமக்களுக்குக் கிடைக்கும் கடன் விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கிறது. இதனால் கடன்களின் EMI குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ஒரு முறை சார்ஜ் செய்தால் 490 கி.மீ போகலாம்.. Kia-வின் முதல் MPV EV இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு?

English Summary

According to reports, the Reserve Bank is set to cut the repo rate by another 25 basis points.

RUPA

Next Post

2026 தேர்தல் சர்வே!. விஜய் தலைமையில் ஆட்சியா?. 39% பேர் ஆதரவு!. அப்போ திமுக-அதிமுக நிலை?. வெளியான கருத்து கணிப்பு!.

Sat Jul 19 , 2025
தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது அதிருப்தி அலை நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெகவிற்கு 39% ஆதரவு கிடைத்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த தனியார் செய்தி சேனல் நடத்திய ஆய்வில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தலைமுறை வாக்காளரிடம் உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு, திமுக […]
stalin vijay eps annamalai

You May Like