நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,038 பதிவான நிலையில், இன்று 4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21,179-இல் இருந்து 23,091 ஆக பதிவாகியுள்ளதாகவும், இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,916 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,79,712 ஆக பதிவாகியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 220,66,16,373 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,979 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருவதால், மக்கள் அதிக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும், தொற்றுக்கான அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.