நாட்டையே உலுக்கிய ஒடிசாவில் நடந்த மூன்று ரயில்கள் விபத்து சம்பவத்தின் போது ரயிலின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்றில் இருந்து ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட 25 வினாடி வீடியோவில் பயங்கரமான காட்சிகள் பதிவாகியுள்ளன. ரயிலின் ஸ்லீப்பர் கோச் ஒன்றில் இருந்து, பயணிகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, ஊழியர் தரையை சுத்தம் செய்யும் பொழுது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. வீடியோவில் பயணிகள் அலரும் சத்தம் பதிவாகியுள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஜூன் 2ஆம் தேதி இரவு 7 மணியளவில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதால், அதன் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன. அதே நேரத்தில் அந்த வழியாகச் சென்ற பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸின் கடைசி சில பெட்டிகளில் கவிழ்ந்தன.இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
A small footage of the coromandel train accident 😥🙏#CoromandelExpress #CoromandelExpressAccident pic.twitter.com/a32REwXaaN
— Najir Sk (@NajirSk03784871) June 8, 2023