நளினி உனகர் என்ற கண்டண்ட் கிரியேட்டர் தனது வீட்டு உதவியாளர் சமீபத்தில் சூரத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட்டை வாங்கியதாக ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது வீட்டு பணிப்பெண் தளபாடங்களுக்கு ரூ.4 லட்சம் செலவழித்து ரூ.10 லட்சம் மட்டுமே கடனாகப் பெற்றதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்தேன் என்று கூறினார். இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தைத் தூண்டியது, பயனர்கள் வீட்டு உதவியாளர் புத்திசாலித்தனமாக சேமித்துள்ளதாக பாராட்டினர்.
“எனது வீட்டு உதவியாளர் இன்று மிகவும் மகிழ்ச்சியாகத் தோன்றினார். சூரத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 3BHK பிளாட் ஒன்றை வாங்கினேன், ரூ.4 லட்சம் தளபாடங்களுக்கு ரூ.10 லட்சம் செலவிட்டேன், ரூ.10 லட்சம் கடன் மட்டுமே வாங்கினேன் என்று அவர் என்னிடம் கூறினார்.
நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். நான் மேலும் கேட்டபோது, அருகிலுள்ள வேலஞ்சா கிராமத்தில் தனக்கு ஏற்கனவே இரண்டு மாடி வீடு மற்றும் ஒரு கடை இருப்பதாகவும், இரண்டும் வாடகைக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். “நான் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்,” என்று நளினி மேலும் கூறினார்.
மேலும் தனது பதிவில் நளினி “புத்திசாலித்தனமான சேமிப்பின் மந்திரம்” பற்றிப் பேசினார். “இது தேவையற்ற விஷயங்களுக்கு பணத்தை வீணாக்காமல் புத்திசாலித்தனமாகச் சேமிப்பதன் மந்திரம் என்று நான் நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.. சில பயனர்கள் வீட்டு உதவியைப் பாராட்டினர், அதே நேரத்தில் சிலர் சூரத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 3BHK பிளாட்டை எவ்வாறு பெறுவது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
பல பயனர்கள் இதுகுறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.. ஒரு பயனர் தனது பதிவில் “அப்படியானால் 60 லட்சத்தில் 3BHK கிடைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் “சூரத்தில் 60 லட்சம் மதிப்புள்ள 3BHK ஒரு கதை போல் தெரிகிறது” என்று பதிவிட்டுள்ளார்..
ஒரு பயனர் எழுப்பிய கேள்வி, படைப்பாளரிடம், “நீங்கள் ஏன் பேசாமல் இருக்கிறீர்கள், ஒருவர் முன்னேறி வருவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்?”
ஒரு பயனரின் கருத்துக்கு பதிலளித்த நளினி, “நிச்சயமாக நான் என் பணிப்பெண்ணுக்காக மகிழ்ச்சியடைகிறேன்! ஆனால் ஒரு சமூகமாக, அத்தகைய வேலைகளில் இருப்பவர்கள் ஏழைகள் என்ற மனநிலையை நாம் உருவாக்கியுள்ளோம். உண்மையில், அவர்கள் பணத்தில் மிகவும் புத்திசாலிகள். நாம் கஃபேக்கள், தொலைபேசிகள், விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பயணங்களுக்குச் செலவிடும்போது, அவர்கள் சேமித்து புத்திசாலித்தனமாக நிர்வகிக்கிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.