தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலுமே கேஸ் அடுப்பு நுழைந்து விட்டது. நமக்கு தெரிந்ததெல்லாம் அடுப்பை ஆன் செய்வது, சமைப்பது மட்டுமே. ஆனால், கேஸ் அடுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆனால், கேஸ் அடுப்பின் நெருப்பை நாம் எப்போதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த நெருப்பு படிப்படியாக உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..?
சரியான சுடரின் நிறம் என்ன..?
நிபுணர்களின் கூற்றுப்படி, ”கேஸ் அடுப்பின் சரியான சுடர் நிறம் பெரும்பாலும் நீல நிறத்தில் ஒரு சிறிய மஞ்சள் முனையுடன் இருக்க வேண்டும். நீல நிற சுடர் என்பது கேஸ் சரியாக எரிகிறது, குறைந்தபட்ச தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகளுடன், பெரும்பாலும் பாதுகாப்பானவையாக கருதப்படுகிறது.
நெருப்பின் அளவு பாத்திரத்தின் தேவையைப் பொறுத்து மாறுபடும். ஆனால், நிறம் பெரும்பாலும் சமைக்கும் போது வெளிப்படும் வாயுவின் தரத்தையும், அளவையும் குறிக்கும். மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் எரிந்தால், அது தீங்கு விளைவிக்கும் என்பதை குறிக்கின்றன. இது கார்பன் மோனாக்சைடை உருவாக்கக்கூடும். இது ஆபத்தான வாயு ஆகும்.
நுனியில் மஞ்சள் நிறத்துடன் கூடிய பெரும்பாலும் நீல நிறச் சுடர் ஆபத்தானது. சுடர் சுற்றிலும் நிலையாக இருக்க வேண்டும். மேலும், விட்டு விட்டு வருவது பிரச்சனையைக் குறிக்கலாம். அடுப்பின் பக்கவாட்டுப் பகுதிகளிலோ அல்லது உங்கள் பாத்திரத்திலோ ஏதேனும் கருப்புப் புள்ளிகள் இருக்கிறதா..? என்பதை பார்க்க வேண்டும்.
மற்றொரு மோசமான வாயு வெளிப்பாடு, காற்று ஏற்றம் அல்லது அடைபட்ட பர்னர் கூட காரணமாக இருக்கலாம். உங்கள் பாத்திரம் அல்லது பர்னரைச் சுற்றி கருப்பு புகை படிந்திருப்பதைக் கண்டால், உங்கள் அடுப்பு எரிவாயுவை சரியாக எரிக்கவில்லை என்று அர்த்தம்.
பிரச்சனை இருந்தால் என்ன செய்ய வேண்டும்..?
இதை சரிசெய்ய ஒரு சிறிய ப்ரஷ் மூலம் பர்னர்களை சுத்தம் செய்யலாம். இந்த சிக்கலை சரிசெய்ய மற்றொரு வழி காற்று-எரிவாயு விகிதத்தை சரிசெய்வதாகும். இது பர்னருக்கு ஆக்ஸிஜன் மற்றும் வாயுவின் சரியான கலவையைப் பெற உதவும். சுடர் வித்தியாசமாக இருந்தாலோ அல்லது கேஸ் வாசனை வந்தாலோ அடுப்பை அணைத்துவிட்டு, சோப்பு நீர் கரைசலைப் பயன்படுத்தி கசிவுகளைச் சரிபார்க்கவும்
Read More : அப்படிப்போடு..!! கடும் எதிர்ப்புகளுக்கு பணிந்தது ஆர்பிஐ..!! நகைக்கடன் நிபந்தனைகளை தளர்த்துவதாக அறிவிப்பு..!!