இல்லத்தரசிகளே..!! சமையலுக்கு இனி தேங்காயை மறந்துருங்க..!! விலை தாறுமாறாக உயர்வு..!!

Coconut 2025

கடந்த சில ஆண்டுகளாக தேங்காயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூ.15 முதல் ரூ.25 வரை விற்கப்பட்ட ஒரு தேங்காய், தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.


2020-21 காலகட்டத்தில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தேங்காய் மரங்களை பராமரிப்பதையும், புதிய கன்றுகளை நடுவதையும் குறைத்துக் கொண்டனர். இதுவே தற்போதைய விளைச்சல் குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், கடந்த 2022இல் அதிக மழை, 2023இல் கடுமையான வறட்சி மற்றும் 2024-25இல் ஏற்பட்ட கடும் வெப்பம் போன்ற காலநிலை மாற்றங்கள் தென்னை விளைச்சலை பெரிதும் பாதித்துள்ளன. குறிப்பாக, கர்நாடகாவில் 30%, ஆந்திராவில் 25% மற்றும் தமிழ்நாட்டில் 40% வரை விளைச்சல் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் இதே நிலைமை தொடர்கிறது.

ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைக் காலங்களில் தேங்காயின் தேவை அதிகரித்ததால், அதன் விலையும், தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரை ஆகியவற்றின் விலையும் உயர்ந்தது. தேங்காய் உற்பத்தி குறைவு என்பது இந்தியாவுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சினை அல்ல. உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலும் உற்பத்தி குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரு மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெயின் விலை ரூ.4,23,000 ஆக உள்ளது, இது இரண்டு வருடங்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், உலகிலேயே அதிக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்திய தேங்காய் உற்பத்தியில், கர்நாடகா 28.5% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

Read More : மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு காத்திருப்போருக்கு குட் நியூஸ்..!! இனி இது தேவையில்லை..!! மின்சார வாரியம் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

சந்திர கிரகணத்திற்குப் பிறகு கட்டாயம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்!. ஏன் தெரியுமா?. மிகவும் பயனுள்ள 7 குறிப்புகள்!.

Sun Sep 7 , 2025
சந்திர கிரகணம் நமது வீடு மற்றும் உடலின் ஆற்றலைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. பாரம்பரியமாக, கிரகணத்தின் போது வீட்டை மூடி வைத்திருப்பது, வழிபாட்டிலிருந்து விலகி இருப்பது மற்றும் உணவுப் பொருட்களை மூடி வைப்பது வழக்கம். ஆனால் கிரகணம் முடிந்த பிறகு, வீட்டின் நேர்மறை ஆற்றலை மீட்டெடுப்பது முக்கியம், ஏனென்றால் எங்காவது நாம் அனைவரும் மிக விரைவாக எதிர்மறை மற்றும் பதட்டத்திற்கு பலியாகிவிடுகிறோம். வாழ்க்கை முறையின் பார்வையில் இருந்து 7 எளிதான […]
eclipse clean house

You May Like