உங்கள் வீட்டில் பயன்படுத்தும் ஸ்டீல் கடாய்களின் அடியில் படிந்திருக்கும் கறைகளைக் கண்டால் அலுத்துப் போகிறதா..? என்ன செய்து பார்த்தாலும், இந்தக் கறைகள் மட்டும் அப்படியே இருக்கா..? இல்லத்தரசிகளே.. உங்களுக்கான சூப்பர் டிப்ஸை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளதுபடி, செய்தால், உங்கள் பாத்திரங்களில் கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
தேவையான பொருட்கள் :
பொடி உப்பு – 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா (சோடா உப்பு) – 1 ஸ்பூன்
எலுமிச்சை – பாதி
பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறை :
* முதலில் கறை படிந்த பாத்திரத்தின் மீது ஒரு ஸ்பூன் உப்பைத் தூவி விட வேண்டும். அதன் மேல் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை தூவிக் கொள்ள வேண்டும்.
* இப்போது, பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து, உப்பு மற்றும் சோடா கலந்த பகுதியின் மீது வைத்து நன்றாகத் தேய்க்க வேண்டும்.
* எலுமிச்சை சாறுடன் உப்பு மற்றும் சோடா கலக்கும்போது, விடாப்பிடியான கறைகளை கூட நீங்கிவிடும்.
* சில நிமிடங்கள் தேய்த்ததும், கறைகள் நீங்கி பாத்திரம் புதியது போல் மின்னுவதை நீங்களே பார்க்கலாம்.
* பாத்திரங்களை இப்படி சுத்தம் செய்வதால், கறைகளைப் போக்க மணிக்கணக்கில் சிரமப்பட வேண்டிய அவசியம் இருக்காது. எளிதில் உங்கள் பாத்திரங்கள் பளபளப்பாக மாறிவிடும்.
Read More : நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு..!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!! ஆனால் ஒரு ட்விஸ்ட்..!!