குரங்கு அம்மையின்போது எவ்வாறு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்….

உலக சுகாதார அமைப்பின்படி குரங்கு அம்மை என்பது சர்வதேச அளவில் உலகளாவிய பொது சுகாதார அவரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட கவலைப்படக்கூடிய ஒரு நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறியிருப்பதைப்போல் 78 நாடுகளில் இது கண்டறியப்பட்டது.

இந்த குரங்கு அம்மை , நோய்த்தாக்குதலுக்குள்ளான நபரின் உடையை, ஆடையை அல்லது அவரது படுக்கையை , கைத்துடைக்கும் துண்டு ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலமாகவோ தொடுவதன் மூலமாகவோ பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


அசுத்தமான ஆடை மற்றும் கைத்தறி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்வதன் மூலம் குரங்கு அம்மை பரவுமா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நோய்த்தாக்குதலுக்குள்ளானவர்களின் ஆடைகளை நாம் பயன்படுத்துவதன் மூலம் குரங்கு அம்மை பரவுமா? .

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் , பயன்படுத்தப்பட்ட ஆடைகள் , படுக்கைகள் மூலம் பரவுகின்றதா என சோதனை செய்யப்பட்டது. ஆம், குரங்கு அம்பை நோய் அசுத்தமான ஆடைகள் , கைத்தறி மூலம் பரவுகின்றது. குரங்கு அம்பையின் பொதுவான பரவல் முறை ஆகும். குரங்கு அம்மை வைரஸ் தாக்கப்பட்ட நபரின் சருமத்தையோ அல்லது புண்ணையோ நேரடியாக தொடுவன் மூலமாகவும் பரவும். இதில் இருந்து வெளிப்படும் நீர்த்தன்மை உள்ள திரவம் இவர் பயன்படுத்திய உடைகளில் ஒட்டிக்கொள்ளும்  அதை வேறு யாராவது பயன்படுத்தினாலும் அவர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பு கொண்டால் வேகமாக பரவும்.

குரங்கு 2

நெருங்கிய உடல் தொடர்பு , உடலுறவு கொண்டால் சுவாச உறுப்புகள் மூலமாக குரங்கு அம்மை பரவலாம். ஆனால்இது பாலியல் நோயாக கருதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து யாருக்கு வேண்டுமானாலும் நேரடி தொடர்பில் இருந்தால் பரவுகின்றது. இதன் விளைவுகள் , ஆபத்துகள் குறைவாக இருந்தாலும் வேகமாக பரவக்கூடியதாக உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் அணியும் ஆடைகளை அணிவதன் மூலம் குரங்கு அம்மை பரவும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

துணி துவைத்தல்

இந்த வைரஸ் ஆடைகளில் , துணிகளில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும் என்பது பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை. அசுத்தமான ஆடைகள் மற்றும் படுக்கைகளை நன்கு துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

துணி துவைப்பதால் குரங்கு காய்ச்சல் ஒழியுமா?

நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் ஆராய்ந்து உள்ளதுபடி வீட்டில் உள்ள கிருமிநாசினிகளால் எளிதில் பாதிக்கப்படும் வைரசாக கண்டறியப்படுகின்றது. கிரிமி நாசினிகள் குரங்கு வைரசை கொல்வதற்காக பயன்படுத்தப்படுவதாக அறிவித்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம்… கிருமி நாசினி பட்டியலை வெளியிட்டுள்ளது அந்த பட்டியலில் உள்ள கிருமிநாசினி இந்தியாவில் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் அதை ஒத்த கிருமிநாசினிகளை பயன்படுத்தலாம்.

காய வைத்தல்

நோய் பாதிப்புடைய ஒருவர் பயன்படுத்திய ஆடைகள் , படுக்கைகள், ஆகியவை மற்றும் அவர் தொட்ட பொருட்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் போது , முகக் கவசம் அணிய வேண்டும். மேலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கையுறைகளை பயன்படுத்த வேண்டும். சூடான நீரில் ஆடைகளை 5நிமிடத்திற்கு ஊறவைத்து பின்னர் துவைக்கலாம். குளோரின் , பிளீச் , சானிடைசரை பயன்படுத்த தேவையில்லை. சாதாரண சோப்பு கூட கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுகின்றது. துவைத்த பின்னர் கண்டிப்பாக வைரஸ்கள் இறந்துவிடும் பின்னர் அதிகமான வெயிலில் காயவைக்க வேண்டும்.

பெல்ட் edited

கைக்கடிகாரம் , பெல்ட் , தொப்பி  போன்றவற்றையும் சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். அல்லது அவற்றை 21 நாட்களுக்கு மூடிய பிளாஸ்டிக் பையில் தனியாக வைத்துவிட வேண்டும். குரங்கு காய்ச்சல் வைரஸ் துணியை கிருமிநாசினிஅல்லது சோப்பு பயன்படுத்தி துவைப்பதன் மூலம் வைரஸ் நீக்கப்படுகின்றது. துணி துவைக்கும் சானிடைசர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் . ஆனால் கண்ணிப்பான தேவை கிடையாது. எப்போதும் உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருங்கள்.

Next Post

தமிழகமே கவனம்... இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க

Sun Sep 25 , 2022
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி என்ற நோக்கில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா […]
tn gov

You May Like