வாணி ஜெயராம் வீட்டில் என்ன நடந்தது..? பணிப்பெண் கூறிய பரபரப்பு தகவல்..

1973-ம் ஆண்டு ‘தாயும் சேயும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வாணி ஜெயராம்.. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.. சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர் வாணி ஜெயராம்.. குடியரசு தினத்தை ஒட்டி அண்மையில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷ்ண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

c07587220ab24c534ee1f1ded493b7951675500479041333 original

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வாணி ஜெயராம் நேற்று மரணம் அடைந்தார்.. அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. வாணி ராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.. அவரின் வீட்டுக்கு மலர்கொடி என்ற பணிப்பெண் 11 மணிக்கு வேலைக்காக வருவது வழக்கம்.. இந்நிலையில் இன்று பணிப்பெண் வந்த போது கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அவர் போன் செய்துள்ளார்..

ஆனால் போனையும் அவர் எடுக்காததால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. காவல்துறையினர் முன்னிலையில் உள் தாழிடப்பட்ட கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது வீட்டின் உள்ளே கட்டிலுக்கு அருகே, வாணி ஜெயராம் விழுந்து கிடந்துள்ளார்.. மேலும் அவரின் நெற்றிப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போது, இடறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.. இதையடுத்து வாணி ஜெயராம் வீட்டில் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.. இதனை தொடர்ந்து வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இதுகுறித்து சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

இதனிடையே வாணி ஜெயராம் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் மலர்க்கொடி இதுகுறித்து பேசிய போது “ நான் எப்போதும் 10.15 மணிக்கு வீட்டுக்கு வருவேன்.. அப்படித்தான் இன்றும் 10.45 மணிக்கு வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடித்தேன்.. பல முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை.. பின்னர் எனக்கு சந்தேகம் வந்தது.. போன் செய்து பார்த்த போது போனையும் எடுக்கவில்லை..

கீழ் வீட்டுக்காரரிடம் சொன்னேன்.. பிறகு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தோம்.. உள்ளே சென்று பார்த்த போது அவர் படுக்கை அறையில் விழுந்து கிடந்தார்.. அவரது நெற்றியில் காயம் இருந்தது.. நான் 10 ஆண்டுகளாக இங்கே பணி செய்து வருகிறேன்.. அவரின் உடல்நிலை நன்றாக தான் இருந்தது.. எந்த பிரச்சனையும் இல்லை..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

தமிழக முதலமைச்சர் திடீர் உத்தரவு...! டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் தலைமையில் குழு...!

Sun Feb 5 , 2023
மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்த சில நாட்களில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த […]
MKSTALIN

You May Like