IPL 2026| முதல் ஆட்டத்திலேயே சொதப்பிய CSK.. பிளேஆஃப் சுற்றுக்கு செல்வதில் சிக்கல்..!

csk

ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இந்த போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக அமைந்தனர்.


சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலா 6 ரன்களில் விரைவில் ஆட்டமிழந்ததால், சென்னை அணிக்கு ஆரம்பமே பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து வந்த மாத்ரே கணக்கே திறக்காமல் (0) வெளியேற, ஷாட் வெறும் 1 ரன்னில் அவுட்டானார். ராஜஸ்தான் அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியின் சார்பில் ஓவர்டன் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து மட்டுமே சிறிதளவு எதிர்ப்பு அளித்தார்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர், பெர்கர் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டனர். இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறக்கிய ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த துருவ் ஜுரெல் 18 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து இலக்கை எளிதாக எட்டியது. இதன் மூலம் Chennai Super Kings அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 38 ரன்னிலும், ரியான் பராக் 14 ரன்னிலும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் கம்போஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை அணியின் தரப்பில் கம்போஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தாலும், அது போதுமானதாக அமையவில்லை. இந்த தோல்வியுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியிலேயே படுதோல்வியை சந்தித்துள்ளது.

பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம்: ஐபிஎல் 2026 தொடரில் Chennai Super Kings அணியின் பந்து வீச்சு செயல்பாடு குறித்து கடும் கேள்விகள் எழுந்துள்ளன. சமீபத்திய போட்டியில், அணியின் பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. கலீல் அகமது போன்றோர் சிறப்பாக பந்து வீச முயன்றாலும், குறைந்த ஸ்கோர் காரணமாக அவர்களின் முயற்சி பயனளிக்கவில்லை.

இந்நிலையில், பந்து வீச்சாளர்கள் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கியமாகியுள்ளது. இல்லையெனில், தொடரின் அடுத்த போட்டிகளிலும் இதே நிலை தொடரும் அபாயம் உள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த முறை Chennai Super Kings அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என கருத்து வெளியிட்டுள்ளனர். அணியின் தற்போதைய செயல்பாட்டை கருத்தில் கொண்டால், பிளேஆஃப் கனவு சவாலாக மாறியுள்ளது.

Read more: நூறு நோய்களுக்கு ஒரே மருந்து.. காலையில் வெந்நீர் அருந்துவதால் எக்கச்சக்க நன்மைகள்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

English Summary

IPL 2026: CSK lost in the first match.. has trouble reaching the playoffs..!

Next Post

"ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்க வேண்டும்! இல்லையென்றால்.." ஈரானுக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப்!

Tue Mar 31 , 2026
Donald Trump Warns Iran To 'Reopen' Hormuz; Kharg Island And Energy Sites In Crosshairs?
donald trump

You May Like