அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டபோது நேரில் பார்த்த அப்பகுதி இளைஞர் ஒருவர் அதிர்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார்.
இன்று 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171, அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. 2 விமானிகள் மற்றும் 10 கேபின் பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். உலகின் மிகவும் பாதுகாப்பான விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விமானம் விபத்தில் சிக்கியது இதுவே முதன்முறையாகும்.. 2 என்ஜின்கள் மீதும் பறவைகள் மோதினால் வேகத்தை அதிகரிக்கும் சக்தி கிடைக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என DGCA தகவல் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்தது. விடுதியில் மருத்துவ மாணவர்கள் உணவருந்திக் கொண்டிருந்த போது இந்த சோகம் அரங்கேறி உள்ளது. இதனால் அங்கிருந்த மருத்துவர்களின் கதி என்ன ஆனது என்ற கவலை எழுந்தது.
இந்த நிலையில் விமான விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறிய வார்த்தைகள் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் பேசுகையில், விமான மோதி வெடித்து சிதறிய சத்தத்தால் பூகம்பம் வந்துவிட்டதோ என்று நினைத்துவிட்டேன். வீட்டில் இருந்து பின்னர் வெளியில் வந்து பார்த்த போது, கரும்புகை சூழ்ந்திருந்தன. அதன்பின் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற போது, எங்கு பார்த்தாலும் விமான பாகங்களும், மனித உடல்களும் சிதறி கிடந்தன என்று கூறி இருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. பல்வேறு உலகத் தலைவர்களும் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக தங்கள் இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகின்றனர். அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இத்தாலி, கனடா, மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகள் இந்த துயரமான நேரத்தில் இந்தியா உடன் நிற்பதாக தெரிவித்துள்ளன.
Read more: விமான என்ஜின்கள் மீது பறவைகள் மோதியதே விபத்திற்கு காரணம்..!! – DGCA தகவல்