9 வயது சிறுமி வன்கொடுமை..? பல மாதங்களாக நடந்த கொடூரம்..!! உண்மையை மூடி மறைக்க கைமாறிய பணம்..!! கிருஷ்ணகிரியில் ஷாக்..!!

Child Rape 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில், கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பெசோ என்ற தனியார் காப்பகத்தில், 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த 61 வயது சாம் கணேஷ் என்பவரால் நடத்தப்பட்டு வரும் இந்த காப்பக வளாகத்திற்குள்ளேயே, ஃபிரிகேஜ் முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.


இந்தப் பள்ளியின் 4ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி, காப்பகத்தின் உரிமையாளர் சாம் கணேஷால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்ல, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த துன்புறுத்தல் நடந்துள்ளது தெரியவந்தது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, போலீசார் காப்பக உரிமையாளர் சாம் கணேஷைக் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க, சாம் கணேஷுடன் இணைந்து பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஓசூரைச் சேர்ந்த நாதா முரளி, செல்வராஜ், மற்றும் சாம் கணேஷின் மனைவி ஜோஸ்பின், ஆசிரியை இந்திரா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனைவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read More : தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நரபலி..? பீதியில் உறைந்து போன மக்கள்..!! கோவை, நாமக்கல்லில் பெரும் பரபரப்பு..!!

CHELLA

Next Post

இந்த 5 பொருட்களை மாலையில் தானம் செய்யாதீர்கள்!. வீட்டிற்கு வரும் லட்சுமி தேவியை விரட்டுவதற்கு சமம்!.

Tue Sep 23 , 2025
வாஸ்து சாஸ்திரம் நம் வாழ்வில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எந்தவொரு பணிக்கும் முன்போ அல்லது செய்யும்போதோ, அதில் வகுக்கப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. நம்பிக்கைகளின்படி, இந்த விதிகளை சரியாகப் பின்பற்றும்போது, ​​முடிவுகள் மிகவும் நேர்மறையானவை. இருப்பினும், இந்த விதிகளைப் புறக்கணிப்பது உங்கள் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வாஸ்து சாஸ்திரத்தினபடி சில பொருட்களை நாம் தவறுதலாக கூட, மாலையில் யாருக்கும் தானம் செய்யக்கூடாது, அல்லது யாராவது கேட்டால் […]
evening donate

You May Like