பிரிந்து சென்ற மனைவியை தேடி வந்த கணவன்..!! கட்டிலில் கள்ளக்காதலனுடன்..!! நேரில் பார்த்து ஷாக்..!! மாந்தோப்பில் பயங்கரம்..!!

Crime 2025 7

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அஸ்வினி ராஜ் மாடர்ன் ரைஸ் மில்லில், பீகார் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குத் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தங்கி வேலை செய்து வந்த கிரண் என்ற பீகார் பெண், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.


அப்போது, அவருடன் பணிபுரியும் முகேஷ் என்பவருடன் கிரணுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கிரணுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய அவரது கணவர் ராஜா சுகன், மனைவியை தேடி அந்த ரைஸ் மில்லுக்கு வந்து, அங்கேயே வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால், கிரண் மற்றும் முகேஷால் முன்பு போல சுதந்திரமாகப் பழக முடியாமல் போனது.

இதனால், தனது கள்ளக்காதல் உறவுக்கு தடையாக இருந்த கணவர் ராஜா சுகனைக் கொலை செய்ய, கிரண் தனது கள்ளக்காதலன் முகேஷுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜா சுகனை, கிரண் தனது கள்ளக்காதலன் முகேஷுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளார்.

பிறகு, இருவரும் சேர்ந்து சடலத்தை அருகில் உள்ள மாந்தோப்பில் வீசியுள்ளனர். காலையில் உடலைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ராஜா சுகனை கொலை செய்தது அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் முகேஷ் என்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் தலைமறைவான நிலையில், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கிரணை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : கார் ரேஸில் மீண்டும் மிரட்டிய அஜித்..!! ஸ்பெயின் பந்தயத்தில் ஏ.கே. ரேசிங் அணி சாதனை..!!

CHELLA

Next Post

கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத கண்கள்.. இப்ப மட்டும் கலங்குதா? CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. முதல்வரின் வீடியோவை விமர்சித்த இபிஎஸ்!

Mon Sep 29 , 2025
கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் பேசிய அவர் “ சமூக ஊடகங்களில் கரூர் துயரம் குறித்து சில பரப்பக் கூடிய விஷமத்தனமான பொய் செய்திகளையும் வதந்திகளையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.. எந்த அரசியல் கட்சி தலைவர்களும் அப்பாவி பொதுமக்களும், […]
puthiyathalaimurai 2024 03 b36f000c 4144 4c99 8019 2d65ed6ad568 5

You May Like