கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் வீட்டில் நள்ளிரவில் நடந்த பரபரப்பான சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மீன்பிடிக்கச் சென்ற சமயத்தில் மனைவி வேறொரு நபருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தெரியவந்ததில் இருந்து கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த முன்தினம் இரவும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகு, கணவனும் மனைவியும் தனித்தனி அறைகளில் தூங்கச் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் திடீரென ஏதோ சத்தம் கேட்டதால் கண்விழித்த மீனவர், மனைவியை தேடி அவர் தூங்கிய அறைக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் கணவர் இருக்கும்போதே அவரது மனைவி கள்ளக்காதலனை வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த மீனவர், ஆத்திரத்தில் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். கள்ளக்காதலனுக்கும் மீனவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கே திரண்டுள்ளனர்.
இந்த குழப்பமான சூழ்நிலையில், கள்ளக்காதலன் திடீரென அங்கிருந்த டேபிளில் இருந்த பிளேடை எடுத்து, தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். உடனடியாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த அந்த நபரை மீட்டு, சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்துக் குளச்சல் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : உடல் எடையை மளமளவென குறைக்கும் ரகசிய பொடி..!! வீட்டிலேயே இயற்கையாக தயாரிக்கலாம்..!!



