ஹைதராபாத்தில் அம்பேர் பேட் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் முதலில் தன்னுடைய தாத்தாவின் கைபேசியில் பிரீ பையர் கேம் டவுன்லோட் செய்து விளையாடி வந்தார். அவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த கேமை தொலைபேசிகளில் இலவசமாக விளையாடலாம். அவர் இந்த கேமில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிய போது கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை செலவழிக்க தொடங்கினார், முதலில் 1500ல் தொடங்கிய இந்த செலவு 10ம் வரையில் சென்றுள்ளது.
இப்படியே அவரது வீட்டிற்கு தெரியாமல் இதனை அந்த சிறுவன் தொடர்ந்து வந்துள்ளார். ஸ்கில்ஸ் மற்றும் வெப்பனுக்காக இவர் இந்த பணத்தை செலவு செய்திருக்கிறார். அது அப்படியே 1.45 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் வரையில் சென்று இருக்கிறது.
இது தெரியாமல் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு சிறுவனின் தாய் தான் கணக்கு வைத்திருக்கின்ற எஸ்பிஐ வங்கிக்கு சென்றுள்ளார். அங்கே அவரது கணக்கில் இருந்த 27 லட்ச ரூபாயும் காணாமல் போனது என அறிந்து கொண்டார். தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியில் இருந்த 9 லட்சம் ரூபாயும் காணாமல் போனது என்பதை அறிந்ததை தொடர்ந்து அதோடு இதற்கு காரணம் தன்னுடைய மகன் என்பதையும் அவர் தெரிந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் வழங்கினார். அதன் பெயரில் காவலர்கள் நடத்திய விசாரணையில் இது வெளியாகி இருக்கிறது. அதாவது, அந்த சிறுவனின் தந்தை காவல்துறை அதிகாரியாக பணியாற்றி உயிரிழந்தவர். மேலும் அந்த 36 லட்சம் ரூபாயும், அவருடைய உழைப்பில் ஈட்டப்பட்டது என்று தெரிய வந்தது. இதில் அவருடைய மறைவுக்குப் பிறகு அரசு தரப்பில் வழங்கப்பட்ட பணமும் அடங்கும் என்று சொல்லப்படுகிறது.