சவுதி அரேபியாவின் மதீனா அருகே இன்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்காவில் தங்கள் சடங்குகளை முடித்த யாத்ரீகர்கள் மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். மோதல் ஏற்பட்டபோது பல பயணிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 24×7 கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது – 8002440003. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவுவதற்காக அரசாங்கம் கட்டுப்பாட்டு அறை எண்களையும் வெளியிட்டுள்ளது – +91 7997959754 மற்றும் +91 9912919545.
இந்த துயர சம்பவத்திற்கு பவ்லேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் தவெக தலைவர் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. அவரின் ட்விட்டர் பதிவில் “ தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : ஷேக் ஹசீனாவின் மரண தண்டனைக்கு இந்தியாவின் பதில் : ‘ஆக்கபூர்வமாக ஈடுபடுவோம்’



