’ஓபிஎஸ் கூட நிறைய நாள் இருந்திருக்கேன்’..!! ’காலை சென்றுவிட்டு மாலை தான் வருவேன்’..!! பரபரப்பை கிளப்பிய ரேகா நாயர்..!!

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரேகா நாயருக்கு, சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால், அவருக்கு சைடு ரோல்களே கிடைத்து வந்ததால், அதையும் தட்டிக்கழிக்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வந்தார். இவருக்கு புகழ் வெளிச்சத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது ’இரவின் நிழல்’ தான்.


பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தார் ரேகா நாயர். அவர் நிர்வாணமாக நடித்ததை பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இதனால், டென்ஷன் ஆன ரேகா நாயர் அவர், கடற்கரைக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்தபோது அடிக்கப் பாய்ந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பின்னர் பயில்வான் செத்தால் அன்றைய தினம் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார் ரேகா நாயர். சமீபத்தில் கூட தனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை என்றால் நிச்சயமாக நடிகர் தனுஷை திருமணம் செய்திருப்பேன் என்று பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசி இருந்தார். அந்த பேட்டியிலேயே தனுஷ் மீது தனக்குள்ள காதலையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் அரசியல் தலைவர்கள் குறித்து பேசிய ரேகா நாயர், ஓபிஎஸ் பற்றி பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, ஓபிஎஸ் கூட நிறைய நாள் இருந்திருக்கேன் என கூறிய அவர், ஓபிஎஸ் கட்சி விட்டு கட்சி மாறும்போது, அவருக்கு தமிழ் எழுதுவதற்காக யாரோ ஒருவர் மூலம் அழைப்பு வந்தது. அதற்காக தினமும் காலை சென்றுவிட்டு மாலை வரை அவரது வீட்டில் பணியாற்றிவிட்டு வருவேன். அவர் ரொம்ப அமைதியான ஒரு மனிதர் என கூறி உள்ளார்.

CHELLA

Next Post

’இதெல்லாம் எங்க ஸ்கூல்ல சகஜம்’..!! ’பிடிக்கலனா வேலையை விட்ரு’..!! பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை..!!

Tue Jul 4 , 2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் அசிசி என்ற தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 110 மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆலங்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். […]
Sexual harassment 1

You May Like