கூலி படத்தில் நான் நடிச்சிருக்கவே கூடாது..!! இனி இந்த மாதிரி நடிக்கவே மாட்டேன்..!! லோகேஷ் மீது கடும் அதிருப்தியில் அமீர்கான்..!!

Amir Khan 2025

இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அமீர்கான். இவர், தனது தனித்துவமான கதாபாத்திரங்களுக்காக பெயர் பெற்றவர். கமல்ஹாசனைப் போலவே, இவர் எப்போதும் புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவார். ‘லகான்’, ‘பிகே’ போன்ற பல படங்கள் அதன் தனித்துவத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.


இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘கூலி’ படத்தில் அமீர்கானை ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தார். ‘விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றதை போல, அமீர்கான் கதாபாத்திரமும் பேசப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், ரஜினிக்கு பீடி பற்றவைக்கும் சிறிய காட்சியில் மட்டுமே அமீர்கான் தோன்றினார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கூலி படத்தை பற்றி அமீர்கான் பேசுகையில், “நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவருடன் நடித்தது பெருமை. இந்த படத்திற்காக நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை” என்று கூறியிருந்தார்.

ஆனால், தற்போது தனது கருத்தை மாற்றிக்கொண்டு வெளிப்படையாக பேசியுள்ளார். “கூலி படத்தில் நடித்தது ஒரு தவறு. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னவென்று எனக்கே தெரியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற வேடங்களில் நடிக்க மாட்டேன். லோகேஷ் என்னை வைத்து ஒரு வேடிக்கை செய்துவிட்டார். எனக்கான கதாபாத்திரத்தை அவர் சரியாக எழுதவில்லை” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

‘கூலி’ படத்தில் அமீர்கானுக்கு நிகழ்ந்தது போலவே, லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரமும் விமர்சனத்திற்கு உள்ளானது. ‘ஒரு மேடையில், லோகேஷ் என்னை வீணடித்து விட்டார்’ என்று சஞ்சய் தத் பேசியிருந்தார்.

Read More : சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!! நடுரோட்டில் திக் திக் நிமிடங்கள்..!! தந்தை கண்முன்னே காருக்குள் வைத்து காதலியை..!! பரபரப்பு

CHELLA

Next Post

மிசோரமின் முதல் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்! இந்த வாக்கு வங்கி அரசியலால் முழு வடகிழக்கு மாநிலமும் பாதிக்கப்பட்டதாக விமர்சனம்!

Sat Sep 13 , 2025
மிசோரமின் முதல் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இது வடகிழக்கு இந்தியாவின் இணைப்புக்கான ஒரு பொறியியல் அற்புதம் மற்றும் மாற்றத்திற்கான ஒரு படியாகும். இன்ற் பிரதமர் மோடி மிசோரமின் சாய்ராங் நிலையத்திலிருந்து முதல் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது மாநில தலைநகரான ஐஸ்வாலில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. ஒவ்வொரு மாநில தலைநகரையும் ரயில் மூலம் இணைக்கும் நீண்டகால தொலைநோக்குப் […]
pm modi in mizoram 1757739342 1 1

You May Like