“இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை..” அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர் உருக்கம்..

recent photo 1749797850 1

நான் உயிருடன் தப்பித்தே என்று இன்னும் நம்ப முடியவில்லை என அகமதாபாத் விமான விபத்த்ல் உயிர் பிழைத்த நபர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு நபர் இஷ்வாஸ் குமார் ரமேஷ்.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் பெற்று வரும் அவர் தான் தப்பித்தது குறித்தும், தான் சந்தித்த துயரமான தருணங்கள் குறித்தும் விவரித்தார். இதுகுறித்து டிடி நியூஸிடம் பேசிய விஸ்வாஸ், “என் கண் முன்னே எல்லாம் நடந்தது. நான் உயிருடன் வெளியே வந்தேன் என்று இன்னும் நம்ப முடியவில்லை. ஒரு கணம், நான் உண்மையிலேயே இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்.” என்று கூறினார்.


விமானம் புறப்பட்ட 10 வினாடிகளுக்குள் விபத்து நடந்ததாக விஸ்வாஸ் கூறினார். “விமானம் பிரச்சனையில் உள்ளது போல் உணர்ந்தேன். பின்னர் திடீரென்று, விளக்குகள் எரிந்தன, அதன் பிறகு, அது வேகமெடுத்தது – பின்னர் அது விபத்துக்குள்ளானது,” என்று நினைவு கூர்ந்தார்.

ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதிய நிலையில், திறந்தவெளியில் விமானம் விழுந்த பக்கத்தில் அமர்ந்திருந்தாக விஸ்வாஸ் கூறினார். மேலும் “எனக்கு அருகிலுள்ள கதவு உடைந்தவுடன், தரை சமமாக இருப்பதைக் கண்டேன், அதனால் நான் அங்கிருந்து தப்பித்தேன்.. என் இடது கையில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன, ஆனால் நான் உயிர் பிழைத்தேன். கட்டிடத்தின் பக்கம் அமர்ந்திருந்தவர்கள் வெளியே வந்திருக்க முடியாது,” என்று கூறினார்.

விஸ்வாஸின் சகோதரர் நயன் குமார் ரமேஷ் இதுகுறித்து பேசிய போது “ விஸ்வாஸ் தப்பித்தது ஒரு “அதிசயம்” என்று தெரிவித்தார். விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு லெய்செஸ்டரில் உள்ள தனது தந்தைக்கு விஸ்வாஷ் தொலைபேசி அழைப்பு விடுத்து, தான் உயிர் பிழைத்ததாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.. விபத்து நடந்தபோது அவர் என் தந்தையை வீடியோ மூலம் அழைத்து, ‘ விமானம் விபத்துக்குள்ளானது. என் சகோதரர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. வேறு எந்த பயணிகளையும் நான் காணவில்லை. நான் எப்படி உயிருடன் இருக்கிறேன், எப்படி விமானத்திலிருந்து வெளியேறினேன் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

நேற்று மதியம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேருடன், விமானம் மோதிய கட்டிடத்தில் இருந்த பலர் உயிரிழந்தனர். பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, அதிகாரிகளைச் சந்தித்து, விசாரணை மற்றும் நிவாரண முயற்சிகளுக்கு அனைத்து தேவையான உதவியும் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

Read More : நெஞ்சை உறைய வைக்கும் தற்செயல்.. கட்டிடத்தில் நுழைந்து வெளியே வரும் விமானம்.. விபத்து நடந்த நாளில் வெளியான விளம்பரம்..

English Summary

Ahmedabad plane crash survivor says he still can’t believe he escaped alive

RUPA

Next Post

90 ஆண்டுகளாக ஆடையே அணியாத விசித்திர கிராம மக்கள்..!! எங்க இருக்காங்க தெரியுமா..?

Fri Jun 13 , 2025
உலகத்தில் சில கிராமங்கள் தனித்துவமான மரபுகளாலும், கலாச்சாரங்களாலும் பிரபலமாகின்றன. ஆனால் பிரிட்டனில் உள்ள ஒரு கிராமம், “நிர்வாண வாழ்க்கை” என்ற விசித்திர மரபை கடந்த 90 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருவது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பிரிட்டனில் ஹெர்ட்போர்ட்ஷையர் என்ற நகரம் உள்ளது. இதன் அருகே உள்ள கிராமத்தின் பெயர் தான் ஸ்பீல்ப்ளாட்ஸ் என்று பெயர். இது மர்மங்கள் நிறைந்த கிராமமாகும். நீண்டகாலமாக வெளியுலகிற்கு தெரியாமல் இருந்து வந்தது. இங்குள்ள […]
nude1 1663326403

You May Like