பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் பேசுகையில், “உயிருள்ள என்னை உதாசனம் செய்து விட்டு, என் உருவப்படத்தை வைத்து உற்சாகம் செய்கிறார்கள். என்னை நடை பிணமாக்கி என் பெயரில் நடைபயணம் செல்வதாக அன்புமணி சொல்கிறார். எல்லாமே நாடகம். என்னை மானபங்கம் செய்வது போல் அன்புமணியில் செயல்பாடு உள்ளது. என் கை விரல் கொண்டே என் கையை குத்திக்கொண்டேன்.
குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம்.. ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் இருக்க கூடாது. 6 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்ற அன்புமணி திட்டமிட்டார். அப்போது நிறைவேறாமல் போனதை இப்போது கைப்பற்ற நினைக்கிறார். அரசியல் வாரிசு என்பது கிடையாது.. யாரிடம் வேண்டுமானாலும் பொறுப்பை வழங்குவேன். தலைவராக அன்புமணி சிறப்பாக செயல்பட வில்லை.. தலைவராக கட்சியை வழி நடத்த தெரியவில்லை.. அவரிடம் எப்படி கட்சியை கொடுக்க முடியும் என்றார்.
எல்லாமே ஐயாதான் என சொல்லிவிட்டு என்னை அதாள பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள். என் குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என செளமியாவிடம் சொன்னேன்.. என் பேச்சை மதிக்கவில்லை.. என் பேச்சுக்கு மாறாக தருமபுரிக்கு வேட்பாளராக செளமியாவை நியமித்தார்கள்.. கடைசியில் என்ன ஆனது. செளமியாவை வேட்பாளராக்க இருவரும் என்னிடம் கெஞ்சி கூத்தாடினார்கள் என கூறினார்.
Read more: UPI பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம்..? – வங்கிகள் மத்திய அரசுக்கு பரிந்துரை