சேரி வாழ் மக்களை கொச்சைப்படுத்துவதுப் போல் நடிகர் அர்ணவ் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அர்ணவ் குடும்பத்தில் மனைவியுடன் சமீப காலமாக ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை குறித்து திருவேற்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தனது மனைவிக்கு ஒரு விதமான மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறிய அர்னவ் குழந்தை பிறந்த பின் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள தான் திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் தான் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைக்கு நண்பர் ஈஸ்வர் தான் காரணம் என குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் தனது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பது போல் தன்னிடம் தொலைப்பேசியில் பேசும் ஈஸ்வர் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார்.
தான் ஒன்றும் சேரியில் பிறக்கவில்லை, நண்பர் ஈஷ்வரும் சேரியில் பிறக்கவில்லை என்று தெரிவித்த அர்ணவ், ஈஸ்வர் ஏன் கொச்சையான வார்த்தைகளில் பேசுகிறார் என்று தனக்கு புரியவில்லை என விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அப்போது சேரியில் உள்ளவர்களை தரம் தாழ்த்துவது போல் பேசுவது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஈஸ்வர் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவது குறித்து எடுத்துக்காட்டுவதற்காகவே சேரி வாழ் மக்களை உதாரணத்திற்கு கூறியதாக அர்னவ் விளக்கம் அளித்தார்.எனினும் ஒரு தவறான உதாரணத்திற்கு சேரி வாழ் மக்களை மையப்படுத்தி அர்னவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகர் அரணவ், இவர் தன்னுடன் கதாநாயகியாக நடித்த சின்னத்திரை நடிகை திவ்யாவை காதலித்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமிய மற்றும் இந்து முறைப்படி செய்து கொண்ட இவர், அதனை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த சூழலில் அர்ணவ் புதிதாக நடித்து வரும் தொடரின் நாயகியுடன் தொடர்பில் இருப்பதாக கூறி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கர்ப்பிணியான திவ்யா அர்ணவ் தாக்கியதாக கூறி அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக அர்ணவ் மீதும் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் அர்ணவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.