“ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க பாடுபடுவேன்..” செங்கோட்டையன் உறுதி..!

vijay tvk sengottaiyan 1

ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க நிச்சயம் பாடுபடுவேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்..


தவெக தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ தமிழ்நாட்டில் புதியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றி நடைபோடுவதற்கு அயராது உழைப்பேன்.. ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க நிச்சயம் பாடுபடுவேன்..” என்று தெரிவித்தார்..

இதனிடையே ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது..

RUPA

Next Post

Breaking : இந்த 2 மாவட்டங்களுக்கு இன்று அரைநாள் விடுமுறை.. டிட்வா புயல் எதிரொலி..

Fri Nov 28 , 2025
டிட்வா புயல் நெருங்குவதால் அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் திருவாரூரில் கல்வி நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் 30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். அதனால், 4 […]
Rain School 2025

You May Like