13 ஆண்டுகளாக உயிரைக் கொடுத்து உழைத்தேன்… இனி விஜய் கட்சி வேண்டாம்..!! – கொடியை கிழித்து வீசிய தவெக நிர்வாகி

vijaytvk2 1750879411

தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில மாதங்களாக நிர்வாகப் பதவிகள் தொடர்பாக சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஹரிஷ், கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். “13 வருடமாக உயிரையே வைத்து உழைத்தேன்… இனி இந்த கட்சி வேண்டாம்!” எனக்கூறிய ஹரிஷ், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


விஜய் மீது உண்மையான நம்பிக்கையோடும், தொண்டுமனப்பான்மையோடும் செயல்பட்டதாகக் கூறும் ஹரிஷ், பொதுச்செயலாளர் ஆனந்த் பணம், சாதி மற்றும் தனிப்பட்ட விசுவாசத்தின் அடிப்படையில் பதவிகளை வழங்குவதாக குற்றம் சாட்டினார். அவரை “புஸ்ஸி ஆனந்த்” என்றழைக்க வேண்டாம் என்றும், “ஒன்சைடு ஆனந்த்” என்றே அழைக்கவேண்டுமெனவும் விமர்சித்துள்ளார்.

கட்சி நிகழ்வுகள் குறித்து எனக்கு தகவல் தரப்படவில்லை. விசுவாசமுள்ளவர்கள் அல்லாமல், பணம் கொடுக்கிறவர்களுக்கு பதவிகள் தரப்படுகின்றன எனவும் குற்றசாட்டை முன்வைத்தார். தொடர்ந்து, ஹரிஸ் கூறுகையில், கடந்த 13 ஆண்டுகளாக விஜயின் மக்கள் இயக்கத்தில் இருந்து வருகின்றேன். கடந்த வருடம் விஜய் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கினேன். கள்ளகுறிச்சி கள்ளச்சாரயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க தலைமையில் இருந்து அறிவிப்பு. அதனால், நாங்கள் எல்லம் சேர்ந்து இளைஞர் அணி சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கியிருக்கிறேன்.

ஆனால், கட்சியில் நடக்கும் தவறுகளை கேட்டால், கட்சிக்கு முரணாக நடப்பதாக கூறுகிறார்கள். நான் கட்சி தலைமைக்கும், மாவட்ட அலுவலகத்திற்கு சென்றால் ஹரிஸ் என என் பெயரை கேட்டாலே, கேட்டை மூடிவிடுகிறார்கள். சாதி ரீதியாக தன்னை தனிமைப்படுத்தி கட்சி பணியை செய்யாமல் தடுத்து வருகிறார் என்று ஹரிஷ் கூறியிருந்தார்.

தனது எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தும் வகையில், ஹரிஷ் தனது காரில் இருந்து தவெகக் கொடியை கழற்றி வீசிய வீடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். முன்னதாகவே, புஸ்ஸி ஆனந்த் மீது பல்வேறு மாவட்டங்களில் இருந்த நிர்வாகிகள் பதவி வாங்க பணம் கேட்டதாக, குறிப்பாக அதிமுக, அமமுக உள்ளிட்ட பிற கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Read more: 2026 முதல் 10 ஆம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு!. CBSE ஒப்புதல்!. முழுவிவரம் இதோ!

Next Post

ஷாக்!. இயற்பியல் தெரிந்ததற்காக 14 ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொலையா?. உண்மை காரணத்தை வெளியிட்ட இஸ்ரேல்!.

Thu Jun 26 , 2025
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் […]
14 Iranian Nuclear Scientists killed 11zon

You May Like