ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர்!… ஜிம்பாப்வேவை வீழ்த்தி முதல் அணியாக இலங்கை தகுதி!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி முதல் அணியாக இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.


ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில், 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 2 அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெறாமல் வெளியேறியது. இலங்கை அணி சூப்பர் சிக்ஸ் போட்டியில் தான் விளையாடிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதல் அணியாக உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அணியாக தகுதி பெறுவதில் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வந்தாலும் ஜிம்பாப்வேக்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாவது நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் 166 ரன்கள் இலக்கை இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

1newsnationuser3

Next Post

வந்தது புதிய ரூல்ஸ்...! ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு இனி கவலை இல்லை...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Mon Jul 3 , 2023
தமிழ்நாடு அரசின்‌ ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல்‌ செய்து கொள்ள புதிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின்‌ வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம்‌ மாவட்ட கருவூல அலகில்‌ ஓய்வூதியம்‌ பெறும்‌ குடிமை ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ ஓய்வூதியம்‌ பெறுபவர்கள்‌, தாங்கள்‌ ஓய்வு பெற்ற மாதம்‌ மற்றும்‌ இந்த மாதத்திற்குள்‌ நேர்காணல்‌ செய்திட வேண்டும்‌. குடிமை குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌, ஆசிரியர்‌ குடும்பஓய்வூதியதாரர்கள்‌ அனைவரும்‌ தங்கள்‌ […]
tn goverment farments

You May Like