“ரசிகர்களை திருப்திபடுத்தினால் நான் நல்லவன்.. இல்லையென்றால்”..!! “அந்த மாதிரி கதை எழுத முடியாது”..!! கூலி படம் குறித்து லோகேஷ் ஓபன் டாக்..!!

Lokesh 2025

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி. இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூலி திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் உலகளவில் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதேபோல், ரஜினியின் கரியரில் மூன்றாவது ரூ.500 கோடியை தாண்டிய படமாக இது உள்ளது.

இந்நிலையில் தான், கூலி திரைப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் ரஜினியின் பிளாஸ்பேக் சீனில் வரும் ரஜினி வாய்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகவும், இது எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “கூலி படம் தொடர்பாக நான் இதுவரை எதுவுமே சொன்னதில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பு இல்லை என்றால் நாங்கள் சினிமாவே பண்ண முடியாது. அதை நாங்கள் குறை சொல்லவும் முடியாது. கூலி படத்தில் டைம் டிராவல் கிடையாது. எல்.சி.யூ. கிடையாது. ரசிகர்களே ஒரு கதையை உருவாக்கினார்கள்.

கூலி படம் வெளியாவதற்கு முன் படத்தின் ட்ரெய்லர் கூட வெளியிடவில்லை. படம் முடிந்து 18 மாதங்கள் அனைத்தையும் மறைத்து வைத்திருந்தேன். ஆனால், ரஜினி சார் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நான் கதை எழுத முடியாது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் நான் நல்ல இயக்குநர். அது முடியாவிட்டால் முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ரூ.1,000 உரிமைத்தொகை வருமா..? தற்காலிகமாக நிறுத்திய தமிழ்நாடு அரசு..!! குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி..!!

CHELLA

Next Post

வெறும் 3.5 அடி உயரம்தான்!. முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா!. யார் இவர்?.

Tue Sep 2 , 2025
நீங்கள் பல ஐஏஎஸ் அதிகாரிகளின் வெற்றிக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லும் கதை மிகவும் வித்தியாசமானது. 3.5 அடி உயரமுள்ள ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா, உயரம் முக்கியமல்ல, திறமையும் கடின உழைப்பும்தான் உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை நிரூபித்துள்ளார். அவரது பயணம் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகமாக உள்ளது, துன்பங்களை எதிர்கொள்ளும் அவரது உறுதியையும் விடாமுயற்சியையும் காட்டுகிறது. அவரைப் பற்றி மேலும் தெரிந்து […]
Aarti Dogra IAS 11zon

You May Like