அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 10 அரசு துறைகளின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன்.
அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! “அதுதான் #DravidianModel” என அனைவர் மனதிலும் பதிய வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
Read More : அஜித்குமார் கொலை.. தடையை மீறி போராட்டம் நடத்துவேன்.. சீமான் அதிரடி.