“கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது அக்கா புருஷன் கூட தான்”..!! தங்கையின் விபரீத ஆசை..!! கடைசியில் ட்விஸ்ட் வைத்த மனைவி..!!

Sex 2025 1

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரு வியாபாரியின் குடும்பத்தில் நடந்த விசித்திரமான சம்பவம், தற்போது ஊர் முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. திருமணமாகி ஒரு வருடம் கழித்து, கணவனும் மனைவியின் தங்கையும் காதலித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இரண்டு வருடங்களுக்கு முன், காசிபூரைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு, அம்ரோஹாவைச் சேர்ந்த வியாபாரியின் மூத்த மகளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான ஒரே ஆண்டில், மருமகனுக்கும் அவரது மனைவி தங்கையான சாலிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாது என்று உறுதியாக இருந்தனர்.

மேலும், ஒன்றாக வாழ வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். ஒரு கட்டத்தில், சாலி “நான் ஜீஜாவை மட்டுமே திருமணம் செய்வேன்.. இல்லையென்றால், கன்னியாகவே இருப்பேன்” என்று கூறி ஜீஜாவின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள்.

இந்த உறவுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சாலியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதற்கிடையே, அக்கா எடுத்த முடிவு அனைவரையும் மேலும் திகைக்க வைத்தது. “என் தங்கையை என் கணவரின் இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று அவர் கூறி பரபரப்பை கிளப்பினார்.

அக்காவின் இந்த முடிவால் ஜீஜாவும் சாலியும் மகிழ்ச்சி அடைந்தாலும், இரு குடும்பத்தினரும் இந்த உறவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அம்ரோஹாவில் உள்ள சமூக விதிமுறைகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.

Read More : அப்படிப்போடு..!! கார், ஏசி, டிவி விலை அதிரடியாக குறைகிறது..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

CHELLA

Next Post

3வது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது - சென்னை உயர்நீதிமன்றம்!

Fri Sep 5 , 2025
மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் ரஞ்சிதா என்பவர் 3வது பிரசவத்திற்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பும் சலுகைகளும் வழங்கக் கோரி ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்தார்.. இந்த விண்ணப்பத்தை நிராகரித்து முன்சீப் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ரஞ்சிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த […]
MPMADRASHIGHCOURT1

You May Like