ஆண் – பெண் விருப்ப உறவுக்கு பிறகு, பிரிந்துவிட்டால் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயது இளைஞர். இவர், ஒரு பெண்ணுடன் ஒரு வருடமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தையும் உள்ளது. இதற்கிடையே, இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ஒரு வருடமாக குடும்பமும் நடத்திவிட்டு, தன்னை ஏமாற்றிய இளைஞர் மீது அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து, தன் மீதான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி, அந்த இளைஞர் மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்குத் தொடர்ந்த நிலையில், அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அந்த இளைஞர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சம்பந்தப்பட்ட பெண்ணை பிரிந்த போது அவர் ஏற்கனவே திருமண பந்தத்தை விவாகரத்து செய்யாமல் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வு அடங்கிய தீர்ப்பில், ”இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என்றாலும், அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராகவோ, திருமண வாக்குறுதி கொடுத்து, அவரது சம்மதம் பெறப்பட்டதாக ஆதாரப்பூர்வமாக உறுதி செய்ய முடியாது. ஆணும் – பெண்ணும் சம்மதத்துடன் உறவு வைத்துவிட்டு, பிறகு விரிசல் ஏற்படும்போது ஒரு தரப்பாக குற்ற வழக்கு தொடர இந்த சம்மத உறவு முகாந்திரம் ஆகாது.
மேலும், இது போன்ற வழக்குகள் நீதிமன்றத்திற்கு சுமையை ஏற்படுத்தும். அதேபோல், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே சட்ட பிரிவுகளை தவறாக பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கிறோம். எனவே, இந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பளித்தனர்.
Read More : இஸ்ரோவில் பணியாற்ற விருப்பமா..? செம வாய்ப்பு..!! மாதம் ரூ.56,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!