விண்ணியலில் நிகழும் அபூர்வ நிகழ்வான கிரகணங்கள், ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக எப்போதும் ஒரு வித அச்சத்தோடும், ஆச்சரியத்தோடும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 3-ஆம் தேதி பௌர்ணமி தினத்தில் நிகழவுள்ளது. சிம்ம ராசியிலும், பூர நட்சத்திரத்திலும் நிகழப்போகும் இந்த கிரகணத்தின் போது, வளிமண்டலத்தில் எதிர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும் என ஜோதிட வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஆண்டு நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெளிவாக புலப்படும் என்பதால், அதன் ‘சூதக காலம்’ (அசுப நேரம்) முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். வேத மரபுகளின்படி, சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 9 மணி நேரத்திற்கு முன்பே சூதக காலம் தொடங்கிவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் கோயில்களின் நடை திறக்கப்படாது. வழிபாடுகள் மற்றும் உணவருந்துதல் போன்றவை தவிர்க்கப்படும். இறைவனை துதிக்கும் ஜபம், தவம் மற்றும் மந்திர உச்சாடனங்கள் மட்டுமே இந்த வேளையில் மங்களகரமான பலன்களை தரும் என கருதப்படுகிறது.
கிரகண நேரத்தில் மரணம் நிகழ்ந்தால் என்ன செய்வது..?
கிரகண நேரத்தைப் பற்றி எழும் ஒரு முக்கியமான மற்றும் சங்கடமான கேள்வி, “அந்த நேரத்தில் மரணம் நிகழ்ந்தால் இறுதிச் சடங்குகளைச் செய்யலாமா?” என்பதுதான். சாஸ்திரங்களின்படி, கிரகண வேளையிலோ அல்லது அதன் சூதக காலத்திலோ அந்திமக் கிரியைகளைச் செய்வது அசுபமானதாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் செய்யப்படும் சடங்குகள் ஆன்மாவின் அமைதியான பயணத்தை பாதிப்பதோடு, குடும்பத்தாருக்கும் தோஷத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகம்.
ஒருவேளை கிரகண நேரத்தில் உயிர் பிரிந்தால், அந்த உடலை பாதுகாப்பாக வைத்துவிட்டு, கிரகணம் முழுமையாக முடியும் வரை காத்திருப்பதே சிறந்தது. சந்திர அல்லது சூரிய கிரகணங்கள் மிக குறுகிய காலமே நீடிக்கும் என்பதால், அந்த நேரம் கடந்த பின் புண்ணியாவாசனம் போன்ற சுத்திகரிப்புச் சடங்குகளைச் செய்து, பின்னர் முறைப்படி இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளலாம். ஆன்மீக நெறிமுறைகளைப் பின்பற்றி, அசுப காலம் முடிந்த பிறகு நற்காரியங்களை தொடங்குவதே ஒரு மனிதனின் இறுதிப் பயணத்தை சிறப்பிக்கும் என நம்பப்படுகிறது.
Read More : புஸ்ஸி ஆனந்த் vs ஜான் ஆரோக்கியசாமி..!! திடீரென வெடித்த மோதல்..!! விஜய்க்கு பெரும் தலைவலி..!!



