”என் மீது குற்றம் இருந்தால் தூக்கில் தொங்க தயார்”..!! மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்பட பிரிஜ் பூஷன் அறிவிப்பு..!!

என் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்க தயார் என மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 17 வயது சிறுமி உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தாங்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளிடம் நான் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதற்கு ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும் என்றும் எந்த தண்டனையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார். மேலும், என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயார் என்று கூறியிருக்கிறார்.

CHELLA

Next Post

பென்ஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு 6 ஆண்டுகளாக தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன்..!! சிக்கியது எப்படி..?

Wed May 31 , 2023
பென்ஷன் பணத்திற்காக தனது தாயின் சடலத்துடன் ஒரு நபர் 6 ஆண்டுகள் வசித்து வந்த பகீர் சம்பவம் இத்தாலியில் நிகழ்ந்துள்ளது. இத்தாலி நாட்டின் வொரோனா பகுதியைச் சேர்ந்தவர் ஹெல்கா மரியா ஹெகன்பார்த். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது 86 வயதில் மரணமடைந்துள்ளார். ஹெல்காவுடன் அவரது மகனும் வசித்து வந்துள்ளார். தாய் இறந்துவிட்ட நிலையில், அவரது மகன் இதை ரகசியமாக மறைக்க திட்டம் போட்டுள்ளார். காரணம் ஹெல்காவுக்கு மாதம் […]
பென்ஷன் பணத்திற்கு ஆசைப்பட்டு 6 ஆண்டுகளாக தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன்..!! சிக்கியது எப்படி..?

You May Like