குழிக்குள் இலங்கையை சிக்கவைப்பதற்கு இந்தியாவும் மேற்கு வங்கமும் முயற்சிப்பதாக இலங்கையின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரின் எம்.பி. விமல் வீரவன்ச புகார் கூறியுள்ளார். இது குறித்து பேசிய விமல் வீரவன்ச இலங்கையில் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இந்தியாவும், மேற்வங்க நாடுகளும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் பேசியா அவர், தமது நாட்டு ரூபாயை, இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது, அவ்வாறு நடந்தால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலை தானாகவே உருவாகிவிடும் என்றும் இலங்கை எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார்.