உங்கள் ஒரே மகன் அன்புமணிக்கே இந்த நிலை என்றால்.. நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்..!! நானே விலகுகிறேன்..!! – ராமதாஸுக்கு பரபரப்பு கடிதம்

ramadoss

சேலத்தை சேர்ந்த பசுமை தாயகத்தின் மாநில இணைச் செயலாளர் சத்ரியசேகர் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்தாண்டு நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால், மேடையில் வைத்தே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையில் ஆரம்ப புள்ளி.

பின்னர், இதைத்தொடர்ந்து பாமகவில் அவ்வப்போது சலசலப்பு எழுந்து வந்த நிலையில், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் ராமதாஸ். ஆனால், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதால் பாமகவின் தலைவராக நானே செயல்படுவேன் என அன்புமணி அறிவித்தார். இதற்கிடையே, அப்பா – மகன் மோதல் உச்சகட்டத்திற்கு சென்றது. நிர்வாகிகளை நீக்குவது, நியமிப்பதும் தொடர்பான அறிவிப்புகளை இருவரும் மாறி மாறி வெளியிட்டு வந்தனர்

இந்த சூழலில் தான் சேலத்தை சேர்ந்த பசுமை தாயகத்தின் மாநில இணைச் செயலாளர் சத்ரியசேகர் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்களது செயல்களால் பல லட்சக்கணக்கானோர் உங்கள் மனதில் இருந்து விலகிய நிலையில் நீங்கள் நீக்கும் முன்பாக, நானாக உங்களிடம் இருந்து விலகி கொள்கிறேன். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு இருந்தோம்.

அதே நம்பிக்கையோடு மாமல்லபுரத்தில் நடைபெற்ற இளைஞர் பெருவிழா மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறச் செய்தோம். அதற்கு பிறகு ஏதேனும் நல்லது நடக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் சட்டரீதியாக நீங்கள் சொன்ன அனைத்து பணிகளையும் சிறப்புடன் செய்து முடித்த, வழக்கறிஞர் பாலுவை கட்சிப்பொறுப்பில் இருந்து விடுவித்து அறிக்கை வெளியிட்ட பின்பு, கடந்த காலங்களை போல, இந்த முறை கடந்து போக முடியலை. எதிர்கால கட்சியின் வளர்ச்சி பணிகளை கருத்தில் கொண்டு, மேலும் 10.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கனவுகளை நனவாக்கிட அன்புமணிக்கு துணையாக இருப்பேன்.

அன்புமணி தலைமையில் எதிர்காலத்தில் ஆளும் அதிகாரத்திற்கு பாமகவை கொண்டு செல்வோம். பெற்ற மகனுக்கு, ஒரே ஒரு செல்ல மகனுக்கு, மிகவும் திறமையான அன்புமணிக்கே இந்த நிலை என்றால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். வக்கீல் பாலு உள்ளிட்ட இந்த இயக்கத்தை வலுவாக்கிட உழைத்த எத்தனையோ மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நீக்கம் என்று சொல்லும்போது நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். கடந்த சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களோடு பயணம் செய்த அந்த நினைவுகளோடு, கனத்த இதயத்தோடு, மீதி நாள் இருக்கும் அந்த காலத்தையும் கடந்து செல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read more: 8 குதிரைகள், 8 ஆசீர்வாதங்கள்.. இந்த புனித படத்தை வீட்டில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?

Next Post

"மாணவிகளை விஜய் தொட்டது குற்றம் தான்.. நடவடிக்கை எடுங்க..!!" - திருந்தாத தவாக.. மீண்டும் பரபரப்பு புகார்..!!

Wed Jun 11 , 2025
கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாணைவிகளை அணைத்து தகாத செயலில் விஜய் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் வழக்கறிஞர் குழந்தைகள் நல குழுவிடம் புகாரளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் […]
Vijay Velmurugan 2025

You May Like