பலரும் 60 வயதை எட்டியதும் வேலைவிடை பெறுகிறார்கள் அல்லது வேலை செய்வதை நிறுத்துகிறார்கள். அதற்குப் பிறகு, நிலையான வருமானம் இல்லாத காரணத்தால் அன்றாட செலவுகளை சமாளிப்பது பல முதியவர்களுக்கு கடினமாகிறது. இந்தப் பிரச்சனையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PMSYM) என்ற ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
யாருக்கான திட்டம்? இந்தத் திட்டம் குறிப்பாக முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில்,
- ஆட்டோ / ரிக்ஷா ஓட்டுநர்கள்
- கட்டுமானத் தொழிலாளர்கள்
- சிறு வணிகர்கள்
- வீட்டு வேலை செய்பவர்கள்
- தெருவோர வியாபாரிகள்
- பீடித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சேரலாம்.
முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதாந்திர நிலையான வருமானத்தை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டத்தில் சேர 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வயதைப் பொறுத்து, பயனாளர்கள் செலுத்த வேண்டிய தொகை மாறுபடும்.
18 வயதில் சேர்ந்தால் – மாதம் ரூ.55
29 வயதில் சேர்ந்தால் – மாதம் ரூ.100
40 வயதில் சேர்ந்தால் – மாதம் ரூ.200
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தொழிலாளர்கள் செலுத்தும் தொகைக்கு சமமான தொகையை மத்திய அரசும் (50:50 பங்களிப்பு) செலுத்துகிறது. 60 வயதை எட்டிய பிறகு, இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
- மாத வருமானம் ரூ.15,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- EPFO, NPS, ESIC போன்ற வேறு எந்த அரசு ஓய்வூதியத் திட்டத்திலும் உறுப்பினராக இருக்கக்கூடாது.
- விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் மொபைல் எண் தேவை.
- அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு (CSC) சென்று விண்ணப்பிக்கலாம்.
- அல்லது https://maandhan.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
இந்த திட்டத்தின் நன்மைகள்:
- 60 வயதுக்குப் பிறகு, மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
- பயனாளி இறந்தால், மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50% (₹1,500) குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும்.
- குறைந்த முதலீட்டில் வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானம் ஈட்டும் வாய்ப்பு.
Read more: எப்பேர்பட்ட தொப்பை கொழுப்பையும் அசால்டா குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்..! எப்படி ரெடி பண்றது..?



