ஏசி அறைக்குள் இந்த தவறுகளை செய்தால் பெரும் ஆபத்து..!! உடல்நலம் கடுமையாக பாதிக்கும்..!! மக்களே உஷார்..!!

Summer AC 2025 2

கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்போது பலரது வீடுகளிலும் ஏசி அல்லது ஏர் கூலர்களை பயன்படுத்துகின்றனர். அவை அதிக வெப்பத்தில் கூட குளிர்ந்த சூழலை நமக்கு வழங்குகின்றன. ஆனால், ஏசியை சரியாக பராமரிக்காவிட்டல், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும், செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும்.


ஏசி அறைக்குள் என்ன செய்யக்கூடாது..?

    * ஈரமான ஆடைகளுடனோ அல்லது குளித்த பிறகோ ஏர் கண்டிஷனர் உள்ள அறைக்குள் செல்ல வேண்டாம். இப்படி செல்வதால், உடல் வெப்பநிலை திடீரெ குறைகிறது. இதனால், சளி, இருமல், தசை வலி, மூட்டு வலிக்கு வழிவகுக்கும்.

    * வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது, ஏசியை 18 டிகிரியில் சிலர் வைப்பார்கள். இது அறையை விரைவாக குளிர்விக்க உதவும். ஆனால், அப்படி செய்வது சரியானது அல்ல. உண்மையில், ஏசியின் வெப்பநிலையை அதிகமாக குறைப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    * மிகக் குறைந்த வெப்பநிலை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இது வைரஸ் தொற்று அல்லது சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, ஏர் கண்டிஷனர் வெப்பநிலையை 24-26 டிகிரி செல்சியஸில் வைத்து பயன்படுத்துவது நல்லது. இது ஆரோக்கியத்திற்கும், மின்சாரத்தை சேமிப்பதற்கும் ஏற்றது.

      * அதேபோல், ஏசியை பயன்படுத்தும்போது, அறையை முழுமையாக மூடியிருக்கும் வரை மட்டுமே குளிர்ச்சியாக இருக்கும். அறையின் கதவை அடிக்கடி திறந்தாலோ அல்லது ஜன்னல்களைத் திறந்து வைத்தாலோ, வெளிப்புற காற்று உள்ளே வரும். இதனால் அறையை முழுவதுமாக குளிர்விக்க ஏசி அதிக நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும். மேலும், அறை கதவுகளை அடிக்கடி திறப்பது அல்லது ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பது ஏசி கம்ப்ரசரின் அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.

        * அதேபோல், ஏசி அறையில், புகைப்பிடிக்க கூடாது. ஏசி அறையில் புகை உமிழும் எந்தவொரு பொருளை பயன்படுத்தினாலும், அதன் புகை வெளியேறாது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். மேலும், இந்த புகையால் ஏசியின் ஃபில்டர் சேதமடைய வாய்ப்புள்ளது.

          * அதேபோல், சீசன் தொடங்கியவுடன் பலர் ஏசியை முறையாக சர்வீஸ் செய்து பயன்படுத்துவார்கள். பின்னர், ஏசியை மறந்தே விடுவரகள். சர்வீஸ் செய்த பிறகு சுத்தம் அல்லது பராமரிப்பு தேவையில்லை என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், ஏசி ஃபில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால், இதில் இருக்கும் அசுத்தமான காற்று சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். கண்கள் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

          Read More : மின்னணு ரேஷன் கார்டை டவுன்லோடு பண்ணிட்டீங்களா..? ஆன்லைனில் நீங்களே ஈசியா செய்யலாம்..!! எப்படி தெரியுமா..?

          CHELLA

          Next Post

          விவசாயிகளுக்கு குட்நியூஸ்!. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,369 ஆக உயர்த்தி அறிவிப்பு!. மத்திய அரசு அதிரடி!

          Thu May 29 , 2025
          விவசாயிகளுக்கான வட்டி தள்ளுபடியைப் பராமரிப்பது தொடர்பாக நேற்று புதன்கிழமை (மே 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2025-26 காரீஃப் பருவத்திற்கான நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் கோடி செலவாகும். கடந்த 10-11 ஆண்டுகளில், காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் […]
          kharif season farmers 11zon

          You May Like