வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், என்ன மாதிரியான பாதிப்புகள் வரக்கூடும் என்பதை டாக்டர் வித்யா விளக்கியுள்ளார்.
வயாகரா மாத்திரை என்பது தசைகளை தளர்த்தி, ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களை பெரிதாக்கி, அதற்குள் அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ஆண் பாலியல் ரீதியாக உற்சாகமாக உணரும்போது இந்த விளைவு 4 மணி நேரம் வரை நீடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், எந்தவொரு செயற்கையான மருந்துகளையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அதேபோல் தான், வயாகரா மாத்திரைகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், கண்களில் பாதிப்பு, இதய நோய், குழப்பம், ஹார்ட் அட்டாக், வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மரணம் கூட நிகழ வாய்ப்புள்ளதாக டாக்டர் வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, மது அருந்திவிட்டு வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, வீட்டிலேயே இயற்கையான உணவுகளை பயன்படுத்தி ஆண்மையை எப்படி அதிகரிக்கலாம் என்பதை யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார். இதற்காக நைட்ரஸ் ஆக்ஸைடு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பாக, பீட்ரூட், மாதுளை, தர்பூசணி பழம் ஆகியவற்றை சாப்பிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவை மூன்றையும் சம அளவில் எடுத்து, அதை மிக்சியில் அரைத்து, ஜூஸ் போல எடுத்துக் கொள்ளலாம். நைட்ரஸ் ஆக்ஸைடு நிறைந்த உணவுகள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதன் மூலம் விறைப்புத் தன்மை பாதிப்பை குணப்படுத்த முடியும். அதேபோல், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் கசகசா மற்றும் ஜாதிக்காய் பவுடர் கலந்து குடிக்கலாம். இவற்றை தொடர்ந்து பின்பற்றும் போது விறைப்புத் தன்மை தொடர்பான பாதிப்புகள் குணமடையும். மேலும், விந்தணுக்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று டாக்டர் வித்யா கூறியுள்ளார்.