கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜேஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவில், இரு மதத்திற்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் ஆராசாவால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
மேலும், வழக்கத்தில் இல்லாத மனுநூல் பற்றி தேவையற்ற கருத்துக்களை ஆ.ராசா பேசியுள்ளார் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்று இந்த புகார் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்பொழுது இதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை எடுத்து நடத்த முகாந்திரம் இல்லை என்று கூறி, வேண்டும் என்றால் மனுதாரர் இதனை கீழமை நீதிமன்றத்தில் புகார் கொடுக்கலாம் என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.