“எனக்கு பீரியட்ஸ் விட்ரு”..!! வலியால் கதறிய பெண்..!! முரண்டுபிடித்த கள்ளக்காதலன்..!! கடைசியில் நடந்த பகீர் சம்பவம்..!!

rape 1

மாதவிடாய் காலத்திலும் தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்த கள்ளக்காதலனை, கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அரவிந்த். இவருக்கு வயது 29. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் – ஜான்சி தம்பதிக்கு சாரிகா (வயது 4) என்ற பெண் குழந்தை உள்ளது. அரவிந்த், டாஸ்மாக் கடையில் லோடு இறக்கும் வேலை செய்து வருகிறார்.

இதன் காரணமாக அவர், தினமும் மது அருந்திவிட்டுத்தான் வீட்டுக்கு வருவாராம். மேலும், தனது மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், அரவிந்துக்கு பால்ராஜ் என்ற நபர் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியும் வந்துள்ளனர்.

அப்போது, பால்ராஜ்க்கு தெரிந்த உஷா என்ற பெண்ணை அரவிந்துக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து, அரவிந்தும் உஷாவும் சில நாட்கள் நட்பாக பழகு வந்துள்ளனர். ஆனால், சில மாதங்களில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. உஷா பணத்திற்காக பல ஆண்களுடன் பழகக் கூடியவர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, அரவிந்தும் உஷாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

உஷா, மாதவிடாய் காலத்தில் இருக்கும்போது கூட குடிபோதையில் தன்னுடன் உடலுறவு வைக்க சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளார் அரவிந்த். இதனால், அவரின் தொல்லை தாங்க முடியாததால், இதுகுறித்து பால்ராஜிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அரவிந்தை அழைத்து பால்ராஜ் கண்டித்துள்ளார். ஆனால், அரவிந்த் தொடர்ந்து உஷாவை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உஷா மற்றும் பால்ராஜ் அரவிந்தை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி, கடந்த மாதம் ஜூன் 19ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு அரவிந்த் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் போதையில் இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பால்ராஜ், அரவிந்தை வழிமறித்து ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், அங்கு காத்திருந்த கூலிப்படையை சேர்ந்த 2 சிறுவர்கள் அரவிந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரின் உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டு, விபத்து போல காட்சிப்படுத்தியுள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அரவிந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கணவரை காணவில்லை என அரவிந்தின் மனைவி ஜான்சி, புகார் அளித்த நிலையில், தண்டவாளத்தில் இறந்து கிடந்தது தனது கணவர் தான் என்பதையும் உறுதி செய்தார். பின்னர், அரவிந்த் மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், 45 நாட்களுக்கு பிறகு வந்த பிரேத பரிசோதனை முடிவில், அரவிந்த் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், அரவிந்தின் செல்போனை ஆய்வு செய்தபோது உஷாவிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது அனைத்து உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, அரவிந்தை கொலை செய்த கூலிப்படையினர், உஷா ஆகியோரை கைது செய்த போலீசார், தப்பியோடிய பால்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : 12 வயது சிறுமியை 3 மாதங்களில் 200 பேர் பலாத்காரம் செய்த கொடூரம்..!! வீட்டை விட்டு ஓடி வந்ததால் நேர்ந்த சோகம்..!!

CHELLA

Next Post

JOB: பரோடா வங்கியில் வேலை.. ரூ.93,960 சம்பளம்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Tue Aug 12 , 2025
Bank of Baroda has issued an employment notification to fill 417 vacancies under the Sales and Agricultural Sales Department.
Bank Jobs Recruitment.jpg 1

You May Like