உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது..
இந்த நிலையில் 2025-ம் ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரியை சேர்ந்த எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னா ஹோர்கைக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நாவலாசிரியர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முக தன்மை கொண்ட எழுத்தாளர் லாஸ்டோவுக்கு இந்த பரிசு வழங்கப்பட உள்ளது. பயங்கரவாதத்திற்கு மத்தியில் கலையின் உத்தியை உறுதிப்படுத்தும் தொலைநோக்கு பார்வை கொண்ட எழுத்திற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இந்த முஸ்லிம் நாட்டில் 2,700 ஆண்டுகள் பழமையான கோவிலை கண்டுபிடித்த தொல்பொருள் ஆய்வாளர்கள்!



