பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 16-ம் தேதி தொடங்க உள்ளது..
சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது என்பது குறித்து பேசினார்.. அப்போது “ தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகிறது.. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்பண மானிய கோரிக்கை, கூடுதல செலவின மானிய கோரிக்கை பிப்ரவரி 20-ல் வாசிக்கப்படும். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என அலுவல ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்..
அதன்படி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது.. இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..



