ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவு குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டது. மதிப்பாய்வில், கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியின் காற்று தரக் குறியீடு மேலும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, 2021 டிசம்பர் 4ம் தேதி, டெல்லியின் காற்று தரக் குறியீடு 407 ஆக இருந்ததாக மத்திய மாசுக் கட்டப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களில் பதிவாகியுள்ளது.
எனவே தற்போது, டெல்லியின் காற்று தரக்குறியீடு மிகவும் மோசம் என்ற பிரிவிற்கு வந்துவிட்டதால், ஜிஆர்ஏபின் ஸ்டேஜ் IIIன் விதியின் கீழ், மேலும் காற்றின் தரம் மாசுபடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஸ்டேஜ் I மற்றும் ஸ்டேஜ் IIன் விதிகளும் கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.